|

|
|
|
|
கவிதை
எழுதுபவன்
கவியன்று.
கவிதையே
வாழ்க்கையாக
உடையோன்,
வாழ்க்கையே
கவிதையாகச்
செய்தோன்,
அவனே கவி -
பாரதி |
| |
சரணமென்றேன் |
|
| |
 |
|
| |
இசையில்
கேட்க |
|
| |
அலையலையாய்
வீசுதடி
ஞாபகங்கள்
உன்
தலைமுடிக்குள்
நழுவுதடி
யோசனைகள்
துளைவழியே
ஊதுதடி
உயிரிதழ்கள்
உன்
துணைகேட்டுப்
பாடுதடி
காற்றலைகள்
பழையதயிர்
மதமதப்பில்
கன்னவில்லை
அதில்
போனஉயிர்
போனதுதான்
மீளவில்லை
தலைகொதித்தே
வெடித்தாலும்
விடுவதில்லை
உன்
தீயிதழால்
நீவிரிக்கும்
முத்தவலை
நிலைகுலைக்கும்
நீள்விழியின்
ஒயிலாட்டம்
என்
நெஞ்சடுப்பில்
எனைத்தள்ளும்
புயலாட்டம்
கலைகொழிக்கும்
இடைதொட்டுத்
திண்டாட்டம்
என்
காலமெல்லாம்
காணவேண்டும்
கொண்டாட்டம்
மழைவிழுந்த
மண்வீசும்
வாசனைபோல்
என்
மனமெங்கும்
நீவிழுந்த
வாசமடி
குலைகுலையாய்ச்
சரிந்துநிற்கும்
வாழையடி
உன்
கோலங்கண்ட
காய்ந்தநதி
ஊறுதடி
பள்ளங்களோ
வளர்நாளில்
ஏராளம்
உன்
பனிதூவும்
புன்னகையால்
மேடாகும்
நில்லுங்கள்
ராசாவே
என்றழைத்து
இடும்
நெற்றிமுத்தம்
துயர்வேரைக்
கொன்றழிக்கும்
வள்ளலுனை
வாழ்வினிலே
கண்டுவிட்டேன்
என்
வாய்க்காலில்
கங்கைவளம்
கொண்டுவிட்டேன்
உள்ளங்கை
நடுவிலுனை
உறங்கவைத்தே
என்
உயிர்மூச்சுக்
காற்றாலே
உனைக்காப்பேன்
மேகமொட்டு
மலைமுகட்டில்
ஓய்வதுபோல்
என்
மார்மீது
மதுசொட்டச்
சாய்கின்றாய்
தேகமெல்லாம்
எலும்பழியக்
குழையுதடி
உயிர்
திரவத்தோடு
திரவமென்று
வழியுதடி
நாகமணித்
தேரிழுத்து
ஓடிவந்தேன்
நீ
நாணமுடன்
காலெடுத்து
ஏறிக்கொண்டாய்
சோகங்களைக்
கொத்தாகத்
தீயிலிட்டாய்
உன்
சொந்தமென்று
சொல்லியெனை
உயிரிலிட்டாய்
பயிரழிந்து
பட்டுப்போன
பாழ்நிலத்தில்
புதுப்
பசுமையேற்றிப்
பரிவோடு
ஏருழுதாய்
உயிரெடுத்து
உயிருக்குள்
ஊட்டுகின்றாய்
என்
உயிர்த்துடிப்பை
எனக்கே
நீ
காட்டுகின்றாய்
கயிறிழுக்கும்
போட்டியுள்ளே
நடக்குதடி
என்
கர்வமெல்லாம்
பெண்மையிடம்
தோற்குதடி
சுயநினைவில்
உயிலொன்று
எழுதுகின்றேன்
உன்
சொர்க்கவிழிச்
சிறையொன்றே
சரணமென்றேன்
|
|
| |
|
|
| |
உயிர்
மலரும் |
|
| |
 |
|
| |
இசையில்
கேட்க |
|
| |
மழை
பொழிய
பொன்
மழை
பொழிய
மனம்
நனையும்
என்
மனம்
நனையும்
மனம்
நனைய என்
மனம்
நனைய
முகம்
தெரியும்
உன்
முகம்
தெரியும்
முகம்
தெரிய
உன்
முகம்
தெரிய
உயிர்
மலரும்
என்
உயிர்
மலரும்
|
|
| |
|
|
| |
குபுக்
குபுக்
குற்றாலம் |
|
| |
 |
|
| |
நான் கவிதை எழுதினால் என் நோட்டுப் புத்தகத்தைத் தாண்டி அது வேறு எங்கும் செல்லாத நாட்கள். நான்
வெட்கப்
படுவேன்தான், என் கவிதைகளை வேறு எவரிடமும் காட்டுவதற்கு. அது என் முதல் காதலை அது முளைத்தபோதே ஊர் கூட்டிச் சொல்லுவதைப்போல எனக்குச் சங்கடமாய் இருக்கும். ஏனெனில் கவிதை என்பது ஒரு வகையில் எனக்கு என் இதய ரகசியம்தான். பிறகுதான் புரிந்துகொண்டேன், என் இதய ரகசியங்கள்கூட என் வார்த்தை வசீகரத்துக்காக, பகிர்ந்துகொள்ளப்படவேண்டியவைதான் என்று.
அதன்பின்னும் நண்பர்கள் என் கவிதைகளை வாசிக்கும்போது என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இது உன் சொந்த அனுபவம்தானே என்ற கிண்டல் அதில் இருக்கும். என் அனுபவம்தான். துவக்கத்தில் அது முழுக்க முழுக்க என் அனுபவம்தான். பிறகெல்லாம், மற்ற நண்பர்களின் அனுபவங்களும் எனக்குக் கவிதைகளாயின. பார்த்துப் பாதி உணர்ந்து பிறகு மீதியை கற்பனையால்
நிரப்பிக்
கொண்டவையும் கவிதைகளாயின.
இப்போதெல்லாம், எங்கோ ஓர் மூலையில் அழும் குழந்தையின் உணர்வுகள் தெளிவாகக் கேட்கிறது. நான் எழுதுகிறேன். ஆக, கவிதைகள் சொந்த அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும், சொந்த உணர்வுகள்தாம் அவை. என்னால் உணராமல் எதையும் எழுதிவிட முடியாது. இந்த உணர்வுகளைப் பெற்றதற்காக நான் பெரிதும் பெருமை கொள்கிறேன். அந்த உணர்வுகளே கவிஞன்.
நான் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வணிக நிர்வாகம் (Business Administration)
படித்துக்
கொண்டிருந்தபோதுதான் முதன் முதலில் குற்றாலம் சென்றேன். அதற்குமுன் நான் என் சிறுவயதில் சென்றிருக்கிறேனாம். எனக்கு நினைவு தெரியாத அனுபவத்தை என்னால் நினைவில் கொள்ளமுடியாதென்பதால் அதை நான் சென்றதாய் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
கல்லூரியின் துடிப்புத்தனத்தோடு நான் குற்றாலம் சென்றதும், மலைமீது நெடுந்தூரம் ஏறிச்சென்று, தேனருவியில் தனித்து நீந்தியதும், "நீ மீண்டுவந்தது அதிசயம், பெரும்பாலும் மரக் கிளைகளால் சுழற்றப்பெற்று மடிபவர்களே அதிகம்" என்றதை அலட்சியப்படுத்தி சந்தோசமாய்க் கூச்சலிட்டதும்.... அது ஒரு வயது. எனக்கு நீந்தத் தெரியும் நான் தஞ்சாவூர்க்காரன் என்று என்னோடு வந்த சென்னைப் பொடியன்களுக்குப் பெருமையாய் அறிவிப்பதே எனக்கு அன்றைய சாகசமாகப்பட்டது. இப்படியான தத்துப்பித்துச் சாதனைகள் என் வாழ்வில் அவ்வப்போது நான் செய்துவந்திருக்கிறேன்.
சரி விசயத்துக்கு வருவோம். பின் என் கல்லூரி கழிந்த அடுத்த ஆண்டே சவுதியில் நான் சிறைபட்டேன். ஆமாங்க... என்னால் அதை அப்படித்தான் சொல்லமுடியுங்க.... நான் சவூதி சென்று என் முதல் பணியில் அமர்ந்தேன். அதைத்தான் சிறைப்பட்டேன் என்கிறேன். ஒரு எட்டு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே உடகார்ந்திருப்பது கடுஞ் சிறையல்லவா? எப்படி இயலும் ஒரு கல்லூரி இளைஞனுக்கு? அதுவும் கவிதை மனம் கொண்ட பறவைக்கு? துடிப்பான இளைஞனுக்கு? அந்தப் பாலைவெளியில் என் கவிதை உணர்வுகளைத் துறந்து, நெருக்கமான நண்பர்களின் கச்சா முச்சா சம்பாசனைகளைத் துறந்து, பாரதிராஜா, பாலுமகேந்திரா, கங்கையமரன் லூட்டிகளைத் துறந்து, அடடா.... மகா கஷ்டம் மகா கஷ்டம். அது கொடுஞ் சிறையேதான். ஆனால் அதே சமயம் நான் சவூதியை மறக்கமாட்டேன். எனக்கு முதல் வேலை தந்ததும். என் குடும்பத்தை நிலை நிறுத்தியதும். எனக்கு அனுபவங்களை வாரிக்கொடுத்ததும் சவூதிதான். மனம் நெகிழ்ந்து சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்.
அந்தக் காலக்கட்டத்தில், ஒரு அறிவிப்பு குமுதத்தில் வந்தது. "குபுக் குபுக் குற்றாலம்" என்ற தலைப்பில் கவிதை எழுதி பரிசு பெறுங்கள். கவிஞர் நிர்மலா சுரேஷ் பரிசுக்கான கவிதைகளைத் தேர்வு செய்கிறார். நானோ, சொந்தத்தில் எழுதி சொந்தத்தில் வாசித்து சொந்தத்தில் முகர்ந்து சொந்தத்தில் சுகப்படுபவன். ஆனாலும் நண்பர்களின் தூண்டுதலால், அலிபாபா இதழ்களில் என் கவிதைகளை இடம்பெறச் செய்திருக்கிறேன். மாலனின் திசைகளில் என் கவிதைகளை வரச்செய்திருக்கிறேன். நா. பார்த்தசாரதியின் தீபத்தில் என் கவிதைகளை ஊர்வலம் போகச் செய்திருக்கிறேன். வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த தாய் பத்திரிகையில், ஆசிரியர் பக்கத்திலேயே என் கவிதைகளை பிரசுரிக்கச் செய்திருக்கிறேன். ஆக, இந்த முதல் போட்டியில் கலந்துகொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.
அது என் மகள் பிறந்த நேரம். முதல் குழந்தை. எத்தனை ஆனந்தமும் குதூகலமும் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். என் மகள் பெயரில் 'குபுக் குபுக் குற்றாலம்' தலைப்பிற்கு என் போட்டிக் கவிதையை அனுப்பிவைத்தேன். பாலையில் காய்ந்துகிடந்த எனக்கு பசுமையாய் இருந்த குற்றால நினைவுகள் வார்த்தைகளை வாரி வாரித் தந்தன. அப்படியே பதிவு செய்தேன். நிர்மலா சுரேஷ் அக்கவிதையைத் தேர்வும் செய்துவிட்டார். ஏதோ பரிசுத்தொகை தருகிறேன் என்றார்கள் குமுதத்தினர். அட... அதெல்லாம் வேண்டாமய்யா.. இந்தப் பரிசு எனக்கு ஒரு கோடி பொன் பெறும் என்று எழுதி அனுப்பினேன்.
இப்போது பார்க்கும்போது, இது என்ன அத்தனை உசத்தியான கவிதையா என்று எண்ணத் தோன்றுகிறது. இதைவிட அருமையான கவிதைகள் பல நான் எழுதிவிட்டேன் என்றே நினைக்கிறேன். இக்கவிதையில் மேலோங்கி நிற்பது குதூகலம் தேடும் ஒரு இளைஞனின் ரசனை உணர்வுகள்தாம். அதற்குப் பரிசும் தேவைதான். அது எங்கே மீண்டும் நமக்குக் கிடைக்கிறது? சொல்லுங்களேன் பார்க்கலாம்?
ஆக நான் பரிசு பெற்ற முதல் கவிதை இதுதான். நான் கலந்துகொண்ட முதல் போட்டியும் இதுதான்.
நம்ம
ஊரு
நயாகராவே
பட்டுப்
பட்டென்று
தலையில்
கொட்டிக்
கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம்
அடிப்பது
உன்
தண்ணீர்க்
கரங்களா
கைகள்
கட்டிக்கொள்ள
கால்கள்
ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம்
ஆடவைப்பது
உன்
சிலீர்ச்
சந்தங்களா
யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து
கசிந்துவரும்
வெள்ளிச்
சரமா
அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி
விழும்
ஒற்றை
வர்ணமா
அப்பப்பா
இத்தனை
பேரையும்
மொத்தமாய்
முத்தமிட
உனக்கே
சாத்தியம்
நீ
கொட்டுவதோ
கோபமாய்
ஆனால்
இத்தனைக்
குளிர்ச்சியாய்
ஒரு
கோபத்தை
நான்
வேறெங்கு
காண
என்
காதலியின்
ஊடலிலா
|
|
| |
|
|
|
சொல்லிவிடவா |
|
|
 |
|
|
காதலை
தூரத்தில்
வைத்து
கற்பனையிலேயே
வாழ்ந்தது
ஒரு காலம்.
கண்ணில்
பட்ட
பெண்ணின்
ஏதோ ஒன்று
இழுத்ததில்
முதன்
முதலாய்த்
தூக்கம்
துவண்டுபோக
தனக்குள்
தானே
சற்றும்
ஓய்வெடுக்காமல்
வெற்று
நீச்சலடித்துக்
கொண்டது
ஒரு காலம்.
தூரநடக்கும்போதெல்லாம்
ஓரக் கண்
முள்ளால்
இதய
ரோஜாவை
கிழித்துவிட்டு,
சின்னதாய்ச்
சிரித்து,
அக்கறையாய்
நலம்
விசாரித்துப்
போகும்
கல்லூரித்
தோழியை
டேய்
மச்சி
அவள்
என்னைக்
கன்னாபின்னான்னு
காதலிக்கிறாடா
என்று
நண்பர்களிடம்
சொல்லி
பெருமைப்பட்டுக்கொண்டது
ஒரு காலம்.
இந்த
உரசல்களும்
தடுமாறல்களும்
கொஞ்சம்
அடங்கியபின்,
ஒரு திட
நிலையை
எட்டி
சற்றே
அமைதி
கொண்டபின்
நிசமே
நிசமாக
அந்தப் பூ
வந்து
பூத்துவிடுகிறது.
ஆமாம்..
நமக்கே
நமக்கென்று
எல்லா
நிலையிலும்
உச்சத்தில்
நின்று
துடிக்குமே
அந்த
உயிர்க்
காதல்
பூத்துவிடுகிற்து.
வேரில்
நீர்
நிறைந்த
ஜீவ
செடியில்தான்
ரோஜா பூ
பூக்கும்.
பட்டமரத்திலும்
மிகச்
செழிப்பாய்
ஒரு பூ
பூக்கும்
என்றால்
அது
வேறென்ன
பூவாய்
இருக்க
முடியும்?
மன
முதிர்ச்சி
வந்தபின்னும்,
திட
எண்ணங்கள்
தலை
முழுவதும்
நிறைந்த
பின்னும்.
எதைச்
செய்யும்
முன்னும்
உலகின்
பிற
விசயங்கள்
எல்லாம்
கண்முன்
ஊர்வலம்
போகும்
நிலை
வந்தபின்னும்.
இது சரி
இது தவறு
என்று
தெளிவாகத்
தெரியும்
ஞானம்
வந்தபின்னும்.
கண்டதும்
கொண்டதும்
என்ற
அவசரம்
மாறி மகா
நிதானம்
வந்தபின்னும்.
இவை
அத்தனையையும்
தட்டிப்பறித்து
மென்று
தின்றுவிட்டு,
மில்லியன்
மின்னலாய்
மன மேக
இடுக்குகளில்
ஊடுறுவிப்
பாய்ந்துவிடுகிறதே
ஓர் அசலே
அசலான
காதல்.
அந்த
உயிர்
ஈர்ப்புக்
காதல்
வெடித்தபின்,
என்ன
செய்வதென்றே
தெரியாத
நம் மனம்
நம்
மனதையே
துரத்தும்
விளங்காத
விளையாட்டு
நிகழும்.
அந்த
விளையாட்டின்
வார்த்தை
ஓட்டங்களாய்
எண்ணிக்
கொள்ளலாம்
இந்தக்
கவிதையை.
அட எப்போ
வந்து
பூத்தா
என்னங்க,
காதல்
பூசணிக்காயை
மனச்
சோற்றுக்குள்
மூடி
வைத்துக்கொண்டு,
வெறித்த
விழி
கிழிய
மருகும்
நிலை
இருக்கிறதே....
அடடா
அதைச்
சொல்ல ஒரு
கவிதை
வேண்டாமா.
இதோ இது
அப்படியொரு
கவிதை
என்று
கொள்ளலாம்.
சொல்லத்
தைரியம்
இல்லாமல்
இருக்கக்கூடும்
அல்லது
சொன்னபின்
இந்தத்
தவிப்பு
இருக்குமா
என்ற
கவலையாய்
இருக்கக்கூடும்.
நிச்சயப்படுத்திக்கொண்டாயிற்று
நிச்சயம்
இது
காதலென்று.
இதைச்
சொன்னால்
என்ன
சொல்லாவிட்டால்தான்
என்ன?
காதல்
காதல்தானே?
மாறவா
போகிறது,
ஏன்
சொல்லவேண்டும்,
இப்படியே
அனுபவிக்கலாமே
என்ற
நினைப்பாய்
இருக்கக்
கூடும்.
யாருக்கு
எப்படியோ
இந்தக்
கவிதையின்
நாயகனுக்கு
எப்படி
என்று
கண்டுபிடியுங்களேன்.
இதோ
அதற்கான
தடயங்களாய்
இந்தக்
கவிதை. அட
இது நம்ம
கதையாச்சே
என்று
நீங்கள்
உச்சுக்
கொட்டினால்
நண்பர்களே
நான்
நிச்சயம்
மகிழ்வேன்.
சொல்லிவிடவா
என்
நெஞ்சக்
கூட்டுக்குள்
படபடவென
சிறகடித்துத்
துடிக்கும்
கிளிகள்
என்ன
சொல்லித்
துடிக்கின்றன
என்று
அன்பே
உன்னிடம்
நான்
சொல்லிவிடவா
உன்
கருவண்டுக்
கண்களுக்குள்
அவ்வப்போது
ஒரு
பனிபடர்ந்தமுகம்
அரும்பு
விட்டுப்
பூப்பதைப்
பார்க்கிறேன்.
கேட்டுவிடவா
அது
என்
முகம்தானே
என்று.
உன்
கன்னங்களில்
சிவந்து
கழுத்துவரை
கரைந்து
விழும்
வெட்க
நிலாக்களில்
ஒரு
தெளிவில்லாத
முகவரி
பார்க்கிறேன்.
கேட்டுவிடவா
அது
என்
முகவரிதானே
என்று
உன்
மாபெரும்
மைவிழிகள்
என்
மனவெளியைப்
படுத்தும்
பாடு
அப்பப்பா
சொல்லவொண்ணாத்
தவிப்பு
அன்பே
உன்
புன்னகைகள்
என்
கனவுகளில்
பொழியும்
பொன்மழையைச்
சொன்னால்.
கேட்டு
மகிழ்வாயா
அன்பே
ஜென்மங்களில்
நம்பிக்கை
உண்டா
உனக்கு
எனக்குக்
கிடையாது
இருப்பினும்
அது
இருக்க
வேண்டுமென
இன்று
ஆசைப்
படுகிறேன்
என்
வார்த்தைக்
குஞ்சுகளை
இன்று
நான்
அடைத்து
வைத்தாலும்
அவற்றை
நம்
மறு
ஜென்மத்திலாவது
ஆசையாய்த்
திறந்து
விடலாமல்லவா
|
|
| |
|
|
| |
கலக்... கலக்... கானிஸ்பே |
|
| |
 |
|
| |
பல்கலைத்தென்றல் ஆரெஸ்மணியின் இசையில் |
|
| |
கனடாவின் டொராண்டோ மாநகரிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மாபெரும் தோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. அதாவது அல்கான்கின் தோட்டத்தில் 5 லண்டன் மாகநகரங்களை அப்படியே வசதியாகப் படுக்க வைக்கலாம், அத்தனை பெரிய தோட்டம். நம்மூரில் இதைக் காடு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கனடாவிலோ இதைப் பெருந்தோட்டம் என்கிறார்கள். ஏனென்றால் இது முழுவதும் இவர்களின் 24 மணி நேர பராமறிப்பில் உள்ளது. மிகப்பெரிய தோட்டம் இதுதானா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் என் வாழ்நாளில் பார்த்த மிகப்பெரிய தோட்டம் இதுதான். இங்கே ஈராயிரத்திற்கும் அதிகமான கரடிகள் இயற்கையாய் வாழ்கின்றன. எண்ணற்ற ரக்கூன்களும் மூஸ்களும் ஓநாய்களும் பல்லாயிரம் பறவைகளும் இதில் வாழ்கின்றன. இத்தோட்டத்தில் பல ஏரிகள் உள்ளன. இவ்வேளையில் கனடா ஏரிகளைப் பற்றி சிறு குறிப்பொன்றைச் சொல்லியாக வேண்டும். கனடாவில் சுமார் ஒரு மில்லியன் நன்னீர் ஏரிகள் உள்ளன. அவற்றுள் அரை மில்லியன் ஏரிகள் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டுமே உள்ளன. டொராண்டோ மாககரம் ஒண்டாரியோ மாகாணாத்தில்தான் உள்ளது. இந்த அல்கான்கின் தோட்டத்தில் சில இரவுகள் குடிசைபோட்டுத் தங்கி களிப்பதற்கு இணை வேறு ஒன்றுமில்லை என்று சொல்வேன். கடந்த ஜூலை மாதம் முதலாம் தேதி அங்கே சென்று வந்ததைப் பற்றிய அனுபவக் கவிதைதான்
இது.
|
|
| |
மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட
பொன்னழகு டெண்டுக்குள்ளே
ஆப்பிள் விதைச் சொகுசாக
அடுக்கு மல்லிச் சிரிப்பாக
தோப்புக் குயில் பாட்டாக
தொடர்ந்ததொரு கொண்டாட்டம்
ராப்பகலா ஆசைப்பட்டு
ரசனையோடு திட்டமிட்டு
ஆப்புவச்ச மழையக்கூட
அலட்சியமா ஒதுக்கிவிட்டு
மாப்பிள்ளையின் விருந்தாக
மரத்தடியின் பார்-பீ-க்யூ
சாப்பாட்டை வெட்டிக்கிட்டு
சந்தோசக் கொண்டாட்டம்
ஏரியோரக் குளியல்போட்டு
ஏரிக்குள்ளே படகுவிட்டு
வாரிவாரிக் குடிச்சாலும்
வத்தாத அழகையெலாம்
வாரம்பல தங்கினாலும்
வாராத சுகத்தையெலாம்
வாரயிறுதி ஒருநாளில்
வாரிக்கிட்ட கொண்டாடம்
பச்சைப்பசும் மரங்களோடு
பாட்டுப்பாடி கைகோத்து
உச்சிவெயில் வேளையிலும்
ஓடிவரும் தென்றலோடு
கொட்டுகின்ற அருவிதனில்
கும்மாளக் குளியல்போட்டு
மட்டற்ற மகிழ்ச்சியிலே
மத்தாப்புக் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டமென
கோடிகவி எழுதினாலும்
கொண்டாடிய உள்ளங்களின்
குதூகலத்தைச் சொல்லிவைக்க
உண்டான சொல்லென்று
ஓர்சொல்லும் கிடையாது
கொண்டாடித் திண்டாடிக்
கொண்டோமொரு கொண்டாட்டம்
அதிகாலை மூணரைக்கே
அவசரமாய்ப் புறப்பட்டோம்
மதி குளிரும் இளங்காலை
மலர் விரித்து வரவேற்க
ஒரில்லியா டிம்ஹார்டன்
ஒன்றினிலே ஒதுங்கினோம்
ஒருகுவளை 'டீ'பருகி
உடன்வந்தோம் கானிஸ்பே
கானிஸ்பே முகாமுக்குள்
காலெடுத்து வைத்தவுடன்
தேன்மதுவில் விழுந்ததுபோல்
தேகமெல்லாம் தித்திப்பு
மானினமும் மீனினமும்
மேப்பிள்இலைத் தோரணமும்
தோணியோட்டும் ஏரியோடு
தெவிட்டாத சுகங்களிங்கே
அல்கான்கொய்ன் என்கின்ற
அழகுபெருந் தோட்டமதில்
இல்லாத சுகங்கள்பல
இறைந்தெங்கும தான்கிடக்க
மெல்லயாம் ஊர்ந்தபோது
மேய்ந்துநின்ற மூஸ்கூட
சொல்லியதாய்ச் சிலிர்த்தோமே
சுகமாக சலாமலைக்கும்
மீண்டுவர மனமில்லாமல்
மிகுந்தசுகம் தந்தபயணம்
மீண்டுவந்த போதுநெஞ்சில்
மெத்தையிட்டுக் கொண்டதடா
வேண்டும்பல இதுபோலென
வேண்டிநிற்கும் போதினிலே
வேண்டிவந்த யாவருக்கும்
நன்றிகூறி நிற்கிறேன்
நாலுமாதம் முன்பொருநாள்
நான்நீயென முந்திக்கொண்டு
ஏழுயெட்டு குடும்பமாக
எல்லோரும் பேர்கொடுத்து
நாளும்மெல்ல நெருங்கவர
நழுவினரே பலருமதில்
தோள்கொடுத்துத் தூக்கிநின்ற
தோழரவர் ரஃபிக்கு நன்றி
ஆறேழு வருடங்களாய்
அங்குமிங்கும் என்றுபல
ஊரெல்லாம் முகாமிட்டு
உறுதிபெற்ற கலிபுல்லா
தேர்போன்ற வாகனத்தில்
துணையாக வந்ததனால்
சீர்பெற்ற செய்திகளைச்
சொல்லித்தான் மாளுமோ
சாலைகளில் மட்டுமன்றி
சமையலிலும் முதல்வராக
மாலைமழை வேளையிலும்
மின்னல்இடி போதினிலும்
வேலையென்று எண்ணாமல்
விருந்தளித்த வெற்றிமகன்
வாழைபோன்ற தாய்மனமே
வாழ்கவே வாழ்க நன்றி
சொல்லெல்லாம் சிரிப்பாக
சோர்ந்தமன மருந்தாக
சொல்லவொரு அண்ணியாக
சுத்தத்தின் தேடலாக
அள்ளியள்ளி ஓயாமல்
அழுக்ககற்றிக் கேம்பினையே
முல்லையாய் வைத்திருந்த
ரஹ்மத்து அண்ணி நன்றி
கேட்டதென்னவோ இவரிடம்
ஆட்டுக்கறி வறுவல்தான்
கேட்காத பலவும் செய்து
காட்டிவிட்டார் இவர்மனதை
கூட்டத்தை வேருடனே
கொள்ளைகொண்ட சேவை
மீட்டாத வீணைபோன்ற
மென்மை ரம்சான் நன்றி
என்மனமோ உயரத்தில்
என்னுயிரோ பரவசத்தில்
இன்னுமின்னும் இதுபோன்ற
இனிப்பான அனைவருக்கும்
என்னுடைய நன்றிகளை
இனிதாகச் சொல்லுகிறேன்
என்னுடனே முகாம் வந்த
எல்லோர்க்கும் நன்றிநன்றி |
|
| |
மேலே செல்ல
|
|
| |
|
|
|
|
|
|